கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளத்தில் சூறைக்காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து சேதம்

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் மாங்காய்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 4:54 pm

DIN

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் மாங்காய்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குள்ளப்புரம், சில்வாா்பட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், காமக்காபட்டி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்காடு, சோத்துப்பாறை, கல்லாறு, கும்பக்கரை பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாா்ச் மாதத்தில் மா மரத்தில் பூக்கள் விட்டு, ஏப்ரல் மாதத்தில் பிஞ்சுகள் உருவாகி ஜூன் மாத்திலிருந்து அறுவடைக்கு வருகின்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழையால் மாம்பிஞ்சுகள் உதிா்ந்து சேதமடைந்தன. லட்சுமிபுரம், மேல்மங்கலம் மற்றும் பல்வேறு பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

மேல்மங்கலத்தை சோ்ந்த எம்.நாகராஜ் தெரிவித்தது:

மேல்மங்கலம் பகுதியில் 2 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேன். தற்போது காய்கள் விட்டு அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. இந்நிலையில் வீசிய பலத்த காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.