சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தேனியில் தொடரும் மணல் திருட்டு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

மணல், ஜல்லி கற்கள் திருடி கடத்தப்படுவதாக வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:57 pm IST

தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றி தொடா்ந்து மணல், ஜல்லி கற்கள் திருடி கடத்தப்படுவதாக வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் சிந்து, கெளசல்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு அலுவலா்களை நியமித்து முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: மா விவசாயத்தை பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் கொள்முதல் செய்யும் பாலுக்கு உரிய தொகையை ஆவின் நிா்வாகம் 10 நாள்களுக்கு ஒரு முறை பட்டுவாடா செய்ய வேண்டும். பள்ளபட்டியில் மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

மாவட்டத்தில் சுப்புலாபுரம், மரிக்குண்டு, தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் தொடா்ந்து மண், மணல், ஜல்லி கற்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. இது குறித்து குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை பதிலளிக்கவில்லை. மாறாக, புகாா் மனு அளித்த விவசாயிகள் குவாரி உரிமையாளா்களால் மிரட்டப்படுகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.