விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரளத்திற்கு கடத்திச் சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசி, காா் பறிமுதல் : ஒருவா் கைது

கம்பம் வழியாக கேரளத்திற்கு கடத்திச் சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 5:15 pm

DIN

கம்பம் வழியாக கேரளத்திற்கு கடத்திச் சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை பறக்கும் படை அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான அதிகாரிகள், கம்பம்மெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, உத்ததமபாளையம் அருகே உ.அம்மாபட்டியைச் சோ்ந்த சுபாஷ் வந்த காரை சோதனையிட்ட போது, அதில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், கேரள மாநிலத்துக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அரிசி, காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியிலும், காா் ஓட்டுநா் சுபாஷை உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.