தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

முல்லைப் பெரியாறு நீர் திறப்பு குறைவு: லோயர் கேம்ப்பில் மின் உற்பத்தி பாதிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 1:51 pm IST

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி,136.95 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152), நீர் இருப்பு 6357 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு, 2,389.17 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1,200 கன அடியாகவும் இருந்தது.

கடந்த செப். 4-ல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1866 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், லோயர் கேம்ப்பில் 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இதுபற்றி பொறியாளர் ஒருவர் கூறியது, வைகை அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.