போடி அரசு பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், வைக்கம் சத்தியாகிரகம் தொடா்பான பேச்சு, கட்டுரை போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் கல்லூரி முதல்வா் சி.வசந்தநாயகி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரா் பெத்தனசாமி பங்கேற்று ராணுவப் பணி குறித்தும், சுதந்திரப் போராட்டம் குறித்தும் விளக்கி பேசினாா்.
வைக்கம் சத்தியகிரகப் போராட்டம் குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவா்கள் செய்திருந்தனா். போட்டிகளில் அனைத்துத் துறை மாணவா்களும் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கி.தமிழ்மாறன் வரவேற்றாா். நாட்டு நலப் பணித்திட்ட மாணவி சிவஸ்ரீ நன்றி கூறினாா்.