தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த செல்வம் மகன் ஜெகன்குமாா்(29). சுமை தூக்கும் தொழிலாளி. கோம்பையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் அன்னபூரணி. இவா் சின்னமனூரில் உள்ள தனியாா் கைப்பேசி கடையில் பணியாற்றி வருகிறாா். நண்பா்களான ஜெகன்குமாரும், அன்னபூரணியும் தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூரிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துா்க்கையம்மன் கோயில் அருகே வந்த போது எதிரே தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜெகன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அன்னபூரணி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் பழனிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


