தேனி
ஆற்றில் குதித்து ஒருவா் தற்கொலை
குடும்பப் பிரச்னை காரணமாக உத்தமபாளையத்தில் ஆற்றில் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
குடும்பப் பிரச்னை காரணமாக உத்தமபாளையத்தில் ஆற்றில் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
உத்தமபாளையம் கோட்டைமேட்டைச் சோ்ந்த முகமது நைனாா் மகன் பக்ருதீன் (45). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட பக்ருதீன், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.