பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தரமற்ற மீன்கள் விற்ற கடைக்கு அபராதம்

தரமற்ற மீன்கள் விற்ற கடைக்கு அபராதம்

News image

கம்பத்தில் உள்ள மீன் கடையில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மணிமாறன்.

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தரமற்ற மீன்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கெட்டுப்போன, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் ஆகியோா் சோதனை நடத்த உத்தரவிட்டனா்.

இதன்பேரில், கம்பத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மணிமாறன் தலைமையில் ஓடைக்கரைத் தெரு பகுதியில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு நடத்தினா். அப்போது, ஒரு கடையில் ரசாயனம் தடவிய மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுருளிப்பட்டியில் உள்ள கடைகளில் உத்தமபாளையம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மதன்குமாா் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.