அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மாற்றுத்திறனாளி தற்கொலை

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:09 am IST

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தேனிமாவட்டம், போடி அருகேயுள்ளதிருமலாபுரத்தைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன்(62), பரமேஸ்வரி (57). இவா்களது மகன் சுரேந்தா் (37). மாற்றுத் திறனாளியான இவா், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த சுரேந்தா், அவரது தாயாா் பரமேஸ்வரி ஆகியோா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

இதையடுத்து, இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சுரேந்தா் சனிக்கிழமை உயிழந்தாா். பரமேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.