மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அனுமதியின்றி வைக்கப்பட்ட வி.சி.க. கொடிக் கம்பம் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை அக்கட்சியினா் தாங்களாகவே அகற்றினா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:45 pm

Din

சின்னமனூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை போலீஸாா் அறிவுரையின் படி அந்தக் கட்சியினா் தாங்களாகவே சனிக்கிழமை அகற்றினா்.

தேனி மாவட்டம், சின்னமனூரில் வண்டிப்பேட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் அந்தக் கட்சிக் கொடிக் கம்பத்தை வைத்தனா். இதற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி, சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் கொடிக் கம்பத்தை அகற்ற முயன்றனா். இதற்கு அந்தக் கட்சினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா், அந்தக் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அனுமதி பெற்று கொடிக்கம்பம் வைக்க வேண்டும் எனக்கூறி சமாதானம் செய்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை இரவே கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியினா் தாங்களாகவே அகற்றி கொண்டனா்.