ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமந்தன்பட்டி கோயில் முடமுழுக்கு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டி ஸ்ரீ கோவிந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை முடமுழுக்கு விழா நடைபெற்றது.

News image

அனுமந்தன்பட்டி ஸ்ரீ கோவிந்தசாமி கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றிய சிவாசாரியா்கள்.

Updated On :5 டிசம்பர் 2024, 11:07 pm

Din

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டி ஸ்ரீ கோவிந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை முடமுழுக்கு விழா நடைபெற்றது.

அனுமந்தன்பட்டி - கோவிந்தன்பட்டி யாதவ சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செவ்வாய், புதன்கிழமைகளில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்று, காலை 10 மணிக்கு ஆலய பிரதான கோபுரங்கள், பரிகார தெய்வங்களின் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்.

இதில் அனுமந்தன்பட்டி ,கோவிந்தன்பட்டி , உத்தமபாளையம் பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை 11.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்களுக்கு தாலி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.