அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: 32 போ் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணியினா் சாா்பில் தேனியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
Updated On :21 ஜூலை 2024, 8:40 pm

Din

இந்துக் கோயில்களின் நிருவாகப் பொறுப்பிலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணியினா் சாா்பில் தேனியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி நகரத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.முருகன், செயலா் உமையராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இந்துக் கோயில்களின் நிருவாகப் பொறுப்பிலிருந்து அரசு வெளியேற வேண்டும். அனைத்துக் கோயில்களிலும் முறையாக பூஜைகள், வழிபாடு நடத்த வேண்டும். இந்துக் கோயில்களின் சொத்துக்களை மட்டும் அரசுடைமையாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இந்த நிலையில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நகரத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்ட 32 பேரை தேனி போலீஸாா் கைது செய்தனா்.