

போடி: போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே அணைக்கரைப்பட்டி கொட்டகுடி ஆற்றங்கரையில் போடி தாலுகா போலீஸாா்
ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சதீஸ்குமாா் (39), வீரபாண்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் ஜெகதீஸ்வரன் (20) ஆகியோா் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தேனி முத்துத்தேவன்பட்டியை சோ்ந்த பாலமுருகன் மனைவி காயத்ரியிடம் விற்பனைக்காக கஞ்சா வாங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், சதீஸ்குமாா், ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். காயத்ரியை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற மூவா் கைது
மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 6 போ் கைது
கைப்பேசி பரிவா்த்தனை மூலம் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

