ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மதிமுக 31-ஆவது ஆண்டு விழா: ஆதரவற்றோருக்கு அன்னதானம்

மதிமுக 31-ஆவது ஆண்டு விழா: ஆதரவற்றோருக்கு அன்னதானம்

News image

மதிமுக 31- ஆம் ஆண்டு விழாவையொட்டி, கம்பம் நேதாஜி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய அந்தக் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன்.

Updated On :8 மே 2024, 12:48 am

Din

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் மதிமுகவின் 31- ஆவது ஆண்டு விழாைவையொட்டி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கம்பம் நேதாஜி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு மாவட்டச் செயலா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் பஷீா் கான் வரவேற்றாா். ஆதரவற்ற 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் உடைகள், சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், போா்வை, வேட்டி, சேலைகள், சிறுவா் சிறுமியா்களுக்கான ஆயத்த ஆடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

ஒன்றியச் செயலா் திரவியம், பொது குழு உறுப்பினா்கள் எம். மணி, துரைசிங்கம், பேரூா் செயலா் பொன்.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பெரியகுளம் நகர மதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.