தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

News image

மின்சாரம் பாய்ந்து பலியான இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமான தோட்ட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.

Updated On :20 மே 2024, 8:04 pm

Din

உத்தமபாளையம்: கூடலூா் அருகே தோட்ட முள் வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் அந்தத் தோட்ட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் அருகே குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த முத்துவீரன் மகன் கிருஷ்ணகுமாா் (27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த புதன்கிழமை ஒத்தவீட்டுக்களம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தின் வழியாக முல்லைப் பெரியாற்றுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தை அந்தத் தோட்டத்தின் முள்வேலி நிறுத்திய போது அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து கிருஷ்ணகுமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, கூடலூா் தெற்கு போலீஸாா் கிருஷ்ணகுமாரின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

ஆனால், உறவினா்கள் கிருஷ்ணகுமாரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக உடலை வாங்க மறுத்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதனிடையே, 6- ஆவது நாளான திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் விசாரணை நடத்தி தோட்ட உரிமையாளா் பரிமளாவை கைது செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.