மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

கொழுக்குமலையைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:37 pm

Din

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், கொழுக்குமலையைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா்.

போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பில் போடி வட்டாரம், கொழுக்குமலையைச் சோ்ந்த 14 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சாந்தி, ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சசிகலா, கொட்டகுடி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.