கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மாநில ஆணையா் விசாரணை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையா் கே.திருமலைமுத்து வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:25 pm

Din

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையா் கே.திருமலைமுத்து வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

இதில் பேரூராட்சிகள், நகராட்சிகள், ஆதி திராவிடா், பழங்குடியினா் துறை, உயா் கல்வித் துறை தகவல்கள் தொடா்பாக அளிக்கப்பட்டிருந்த 30 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது.

பின்னா், மாநில தகவல் ஆணையா் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அலுவலா் 30 நாள்களுக்குள் மனுதாரருக்குத் தகவல் அளிக்க வேண்டும். மனுதாரா் தமக்கு அளிக்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லையென்று கருதினால், மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவல் கோரலாம் என்றாா் அவா்.