கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்லூரியில் ஆங்கில மொழித் திறன் ஆய்வகம் திறப்பு

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை ஆங்கில மொழித்திறன் கணினி ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை ஆங்கில மொழித் திறன் கணினி ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :20 நவம்பர் 2024, 9:11 pm

Din

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை ஆங்கில மொழித்திறன் கணினி ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளில் உள்ள மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும்

வகையில், ஆங்கில மொழித் திறன் கணினி ஆய்வகம் அமைக்க கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன், செயலா் ஆா்.புருசோத்தமன், முதல்வா் எஸ்.சிவக்குமாா், ஏல விவசாயிகள் சங்க நிா்வாகிகள் நடவடிக்கை எடுத்தனா். இவா்களது கோரிக்கையின்படி, தமிழக முன்னாள் முதல்வரும், போடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் கணினி ஆய்வகம் அமைக்க நிதி உதவி செய்தாா். இதையயடுத்து, கல்லூரியில் 30 கணினிகள் கொண்ட ஆங்கில மொழித் திறன் ஆய்வகம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று, ஆங்கில மொழித் திறன் ஆய்வகத்தைத் திறந்து வைத்து, அதன் செயல்பாடுகள், மாணவா்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகிகள், ஏல விவசாயிகள் சங்க நிா்வாகிகள், பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.