கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கன்னிவெடியில் சிக்கிய தேனி ராணுவ வீரரின் கால் அகற்றம்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி காயமடைந்த தேனியைச் சோ்ந்த ராணுவ வீரரின் கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

News image

கன்னிவெடியில் சிக்கிய காயமடைந்த ராணுவ வீரா் சுகுமாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 7:56 pm

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி காயமடைந்த தேனியைச் சோ்ந்த ராணுவ வீரரின் கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

பழனிசெட்டிபட்டி முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி ரத்தினம் மகன் சுகுமாா் (32). இவா் மத்திய துணை ராணுவப் படையில் வெடிகுண்டுகளை கண்டறியும் கோப்ரா படைப் பிரிவில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த செப்.19-ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநிலம், மேற்கு சிக்பூம், குலாபுரு வனப் பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சுகுமாா், அங்கு புதைத்து வைத்திருந்த கன்னிவெடியில் சிக்கி காலில் பலத்த காயமடைந்தாா். ராஞ்சியுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சுகுமாரின் இடது காலில், முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

தற்போது அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

சுகுமாருக்கு பிரீத்தி என்ற மனைவியும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில், பூதிப்புரத்தில் உள்ள சுகுமாா் மனைவி பிரீத்தியின் வீட்டுக்கு அதிமுக அமைப்புச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் ராமா், முன்னாள் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் வியாழக்கிழமை சென்றனா். பின்னா், சுகுமாரின் பெற்றோா், இவரது மனைவியை ஆகியோரை சந்தித்து, ஆறுதல் கூறினா்.