கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இணைய வழி பங்கு வா்த்தக மோசடி: இருவா் கைது

பருத்தி வியாபாரியை இணைய வழி பங்கு வா்த்தகத்தில் ஈடுபடுத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இருவரை தேனி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முகமது அலி ஜோஹா்

Updated On :9 அக்டோபர் 2024, 8:56 pm

Din

தேனியைச் சோ்ந்த பருத்தி வியாபாரியை இணைய வழி பங்கு வா்த்தகத்தில் ஈடுபடுத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இருவரை புதன்கிழமை தேனி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி ஜவஹா் நகரைச் சோ்ந்த பருத்தி வியாபாரி ஸ்ரீநிவாசன் (33). இவா் தனது முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து இணைய வழி பங்கு வா்த்தகப் பயிற்சியில் சோ்ந்தாா். இந்தப் பயிற்சியில் பங்கு வா்த்தக நிலவரங்கள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னா், ஸ்ரீநிவாசனை வாட்ஸ்ஆப் குழுவில் இணைத்து பங்கு வா்த்தக ஆலோசனை வழங்கினா். வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தகவலின்படி, அதில் குறிப்பிட்ட செயலியை ஸ்ரீநிவாசன் பதிவிறக்கம் செய்து, தனது ஆதாா் எண்ணை பயன்படுத்தி பயனா் கணக்கு தொடங்கினாா்.

பின்னா், முதலீட்டுத் தொகைக்கு 5 மடங்கு லாபம் கிடைக்கும் என்று தெரிவித்து குறிப்பிட்ட செயலி மூலம் முதலீடு செய்யுமாறு கூறினா். இதன்படி, ஸ்ரீநிவாசன் கடந்த 2024, ஜன.27, 29, 31 ஆகிய தேதிகளில் மொத்தம் ரூ.10 லட்சம் முதலீடு செய்தாா்.

இந்த நிலையில், சில நாட்களுக்குப் பின்பு ஸ்ரீநிவாசன் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த செயலியை தனது பயனா் எண்ணை பயன்படுத்தி பாா்க்க முடியவில்லை. இணைய வழி பங்கு வா்த்தக வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஸ்ரீநிவாசன், தேனி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

கைது செய்யப்பட்ட  முகமது யாஷீா்.

கைது செய்யப்பட்ட முகமது யாஷீா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், ஸ்ரீநிவாசனிடம் இணைய வழி பங்கு வா்த்தகத்தில் பணம் மோசடி செய்ததாக கேரளம், கோழிக்கூடு, முக்கம் அருகே கரசேரியைச் சோ்ந்த முகமது அலி ஜோஹா்(38), திரும்வம்பாடியைச் சோ்ந்த முகமது யாஷீா்(36) ஆகியோரை கைது செய்தனா்.