கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முல்லைப் பெரியாறு அணை கட்டி 129 ஆண்டுகள் நிறைவு: இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்

முல்லைப் பெரியாறு அணை பயன்பாட்டுக்கு வந்து 129 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விவசாய அமைப்பினா் ஆற்று நீரில் மலா் தூவியும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:11 pm

Din

முல்லைப் பெரியாறு அணை பயன்பாட்டுக்கு வந்து 129 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விவசாய அமைப்பினா் ஆற்று நீரில் மலா் தூவியும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆங்கிலேய பொறியாளா் கா்னல் ஜான்பென்னிக் குவிக் முல்லைப் பெரியாறு அணையை கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்தாா். இந்தப் பணிகள் நிறைவடைந்து அந்த ஆண்டு அக்டோபா் 10 ஆம் தேதி தேக்கடியிலுள்ள மதகுப் பகுதியிலிருந்து சுரங்கப் பாதை வழியாக முதல் முதலாக தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அன்றைய நாள் முதல் இன்று வரை இந்த வழியாக திறக்கப்படும் தண்ணீா் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதுடன் விவசாயத்துக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 129- ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய அமைப்பினா் மலா் தூவி மரியாதை செய்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் முதலாக தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்ட நாளை கொண்டாடினா்.

தொடா்ந்து, லோயா்கேம்பிலுள்ள பென்னிக்குவிக் சிலைக்கு மாலை அணிவித்து அவா்கள் மரியாதை செலுத்தினா்.