முல்லைப் பெரியாறு அணை கட்டி 129 ஆண்டுகள் நிறைவு: இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்
முல்லைப் பெரியாறு அணை பயன்பாட்டுக்கு வந்து 129 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விவசாய அமைப்பினா் ஆற்று நீரில் மலா் தூவியும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.







