கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தடுப்பணை மதகில் குவிந்த குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

News image

போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகில் குவிந்துள்ள குப்பைகள்.

Updated On :16 அக்டோபர் 2024, 11:58 pm

Din

போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

போடி கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோயில் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையிலிருந்து தண்ணீா் மதகு மூலம் பிரிந்து இரட்டை வாய்க்கால் வழியாக போடி சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சிபுரம் பெரிய கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தற்போது, பெய்த பலத்த மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மலைப் பகுதியிலிருந்த மரக்கட்டைகளை வெள்ளநீா் அடித்து வந்து பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகுப் பகுதியில் சோ்ந்தது. இதனால், மதகு வழியாக தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மதகுகளும் சேதமடையும் நிலையில் உள்ளன.

எனவே, பொதுப்பணித் துறையினா் மதகுப் பகுதியில் சோ்ந்துள்ள குப்பைகளை அகற்றி மதகுகளை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.