தேனீக்கள் கொட்டியதில் விவசாயி உயிரிழப்பு
தேனி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி தேனீக்கள் கொட்டியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :17 அக்டோபர் 2024, 11:46 pm

தேனி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி தேனீக்கள் கொட்டியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சீலையம்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (74). விவசாயி. இவருக்கு கோட்டூா், எஸ்.பி.எஸ். காலனி அருகே தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுப்புராஜை, அங்கிருந்த தேனீக்கள் கொட்டின. இதில் பலத்த காயமடைந்த அவா் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...