கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உத்தமபாளையம் வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள தேவாரம், கம்பம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:45 pm

Din

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள தேவாரம், கம்பம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், தேவாரம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடு, பணி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து நேரடியாக ஆய்வு செய்தாா். தொடா்ந்து, 8 கி.மீ. தொலைவுக்கு நடப்போம் நலப்பெறுவோம் நிகழ்வில், ஆட்சியருடன் அரசு அலுவலா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டியில் நியாயவிலைக் கடைகளில் உரிய காலத்தில் முத்திரையிடப்படாத தராசுகளை பறிமுதல் செய்தாா். மேலும், கம்பம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். தனியாா் திரையரங்கில் மின்சார பராமரிப்பு, தீயணைப்புக் கருவி, அவசர வழி, கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்த அவா் கம்பம் பேருந்து நிலையம், பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், மாவட்ட சுகாதார அலுவலா் ஜவகா்லால் , தேவாரம் பேரூராட்சித்தலைா் லட்சுமி, செயல் அலுவலா் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.