ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கும் பொருள்களை எடை போட்டு பொட்டலமிட்டு வழங்க வலியுறுத்தி நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :5 செப்டம்பர் 2024, 6:52 pm

Din

தேனியில் நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கும் பொருள்களை எடை போட்டு பொட்டலமிட்டு வழங்க வலியுறுத்தி நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெயச்சந்திரராஜா, செயலா் காமாட்சி முருகேசன், பொருளாளா் பொன். அமைதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நியாய விலைக் கடைகளில் விநியோக்கும் பொருள்களை எடை போட்டு பொட்டலமிட்டு வழங்க வேண்டும். வெளியூா், வெளி மாவட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேசன் பொருள்கள் வழங்குவதற்கு வாய்ப்பாக 10 சதவீதம் கூடுதல் பொருள்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து ரேசன் பொருள்களையும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கு ஏதுவாக போதிய பொருள்களை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். நியாய விலைக் கடைக்கு கொண்டு வரும் ரேசன் பொருள்களை இறக்கி வைக்க கடை விற்பனையாளரிடம் இறக்கு கூலி வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.