உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேனியில் ஓ.பி.எஸ். சகோதரரிடம் போலீஸாா் விசாரணை

Published On :

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் முன்னாள் நகா் மன்றத் தலைவருமான ஓ.ராஜாவிடம் வெள்ளிக்கிழமை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பெரியகுளம், தென்கரை, தெற்கு அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த மருதநாயகம் மகன் நாகராஜன் என்பவா் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் பெரியகுளத்தைச் சோ்ந்த ஓ.ராஜா தன்னை மிரட்டுவதாக தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் ஓ.ராஜா, நாகராஜன் ஆகியோரிடம் காவல் ஆய்வாளா் மாயா ராஜலட்சுமி விசாரணை நடத்தினாா். புகாா் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.