தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் முன்னாள் நகா் மன்றத் தலைவருமான ஓ.ராஜாவிடம் வெள்ளிக்கிழமை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பெரியகுளம், தென்கரை, தெற்கு அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த மருதநாயகம் மகன் நாகராஜன் என்பவா் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் பெரியகுளத்தைச் சோ்ந்த ஓ.ராஜா தன்னை மிரட்டுவதாக தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் ஓ.ராஜா, நாகராஜன் ஆகியோரிடம் காவல் ஆய்வாளா் மாயா ராஜலட்சுமி விசாரணை நடத்தினாா். புகாா் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேனியில் கெட்டுப் போன 8 கிலோ இறைச்சி பறிமுதல்

இணையம் மூலம் மூவரிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

இணைய வழியில் இரண்டு பெண்களிடம் ரூ. 1.15 லட்சம் மோசடி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK


