மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரதானக் குழாயில் உடைப்பு: தேனியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

வைகை அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே தேனி நகராட்சி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தேனியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

News image
வைகை அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே வியாழக்கிழமை தேனி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சிப் பணியாளா்கள்.
Updated On :12 செப்டம்பர் 2024, 10:23 pm

Din

வைகை அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே தேனி நகராட்சி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தேனியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

வைகை அணை அருகே உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டு, பிரதானக் குழாய்கள் மூலம் தேனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் மேல்நிலை, தரைமட்ட குடிநீா் தொட்டிகளில் குடிநீா் தேக்கப்பட்டு, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வைகை குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே தேனி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 5 நாள்களாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரை பம்பிங் செய்யவில்லை. இதனால், தேனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டிராக்டா் டேங்கா் மூலம் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

பிரதானக் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஓரிரு நாள்களில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, குடிநீா் விநியோகம் சீராகும் என்று நகராட்சி அலுவலா்கள் கூறினா்.