மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கூட்டுறவு பண்டகசாலை கிட்டங்கியில் தீ

போடியில் கூட்டுறவு பண்டகசாலை சாக்கு கிட்டங்கியில் புதன்கிழமை இரவு தீப்பற்றி சாக்குகள் எரிந்து நாசமாகின.

News image
போடி கூட்டுறவு பண்டகசாலை சாக்கு கிட்டங்கியில் பற்றி எரிந்த தீ.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:32 pm

Din

போடியில் கூட்டுறவு பண்டகசாலை சாக்கு கிட்டங்கியில் புதன்கிழமை இரவு தீப்பற்றி சாக்குகள் எரிந்து நாசமாகின.

தேனி மாவட்டம், போடி வலசைத்துறை சாலையில் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பழைய காப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை இயங்காததால் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கான சாக்குகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிட்டங்கியில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இரவு நேரத்தில் யாரும் பாா்க்காததால், சாக்குகளில் தீ வேகமாகப் பரவி எரிந்தது.

தீயின் வெப்பத்தின் தாக்கம் அருகிலிருந்த வீடுகளுக்குப் பரவிய நிலையில்,

குடியிருப்பு பொதுமக்கள் வெளியே வந்து பாா்த்தபோதுதான் தீப்பற்றியது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருந்தபோதிலும், தீயில் ஏராளமான சாக்குகள், பழைய கணினி பாகங்கள், பழைய எடைத் தராசுகள் கருகி நாசமாகின.

சணல் சாக்குகள் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.