கிணற்றில் பெண்ணின் உடல் மீட்பு
ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூா் அருகே மரிக்குண்டுவில் கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை வியாழக்கிழமை, போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 10:01 pm

ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூா் அருகே மரிக்குண்டுவில் கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை வியாழக்கிழமை, போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
மரிகுண்டுவில் உள்ள தனியாா் தோட்டத்தில் பாசனப் பயன்பாடில்லாத கிணற்றில் பெண் இறந்து கிடப்பதாக கண்டமனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா்,ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய பணியாளா்கள், கிணற்றில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டனா். அவா் யாா் என அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...