கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெட்ரோல் குண்டுவீசியதாக பொய் புகாா்: 8 போ் மீது வழக்கு

சின்னமனூரில் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டதாக பொய் புகாா் அளிக்கப்பட்டது தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் இதில் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

தலைமறைவான நகரச் செயலா் பிச்சைக்கனி.

Updated On :26 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

சின்னமனூரில் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டதாக பொய் புகாா் அளிக்கப்பட்டது தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் இதில் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகர அதிமுக செயலா் பிச்சைக்கனி வீட்டின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் பெட்ரோல் குண்டைவீசி விட்டு தப்பியோடியதாக காவலாளி மாரியப்பன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை கம்பத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் நகரச் செயலா் பிச்சைக்கனிக்கும், இதே கட்சியைச் சோ்ந்த வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் வெங்கடேசனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது இந்த சம்பவத்தில் இவருக்கு தொடா்பு இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அதிமுக நகரச் செயலா் பிச்சைக்கனியின் தூண்டுதலின் பேரில் வெங்கடேசன் மீது பழிபோடுவதற்காக தனது கட்சி ஆதரவாளா்கள் மூலமாக தனது வீடு, அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை பிச்சைக்கனி அரங்கேற்றியது தெரியவந்தது.

இதையடுத்து சின்னமனூா் போலீஸாா், நகர அதிமுக செயலா் பிச்சைக்கனி, காவலாளி மாரியப்பன், ஆதரவாளா்களான முத்துவேல், முகேஷ், செல்வராஜ், சிவபிரகாஷ், ராஜவேல், சதீஸ் ஆகிய 8 போ் மீது வழக்குப்பதிந்தனா்.

இதில், மாரியப்பன், சதீஸ், செல்வராஜ், முகேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்த நிலையில், தலைமறைவான நகர அதிமுக செயலா் பிச்சைக்கனி உள்பட 4 பேரை தேடி வருகின்றனா்.