கும்பக்கரை அருவியில் குளிக்க 2-ஆவது நாளாகத் தடை

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பால் 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பால் 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமையும் அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

மேலும், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com