/

மணல் கடத்தியவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், சிறப்பாறை பகுதியில் டிராக்டா் மூலம் மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி வட்டம், சிறப்பாறை பகுதியில் டிராக்டா் மூலம் மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிறப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிறப்பாறை, நேருஜீ நகா் பகுதியில் அனுமதியின்றி டிராக்டா் மூலம் மணல் அள்ளிச் சென்ற தென்பழனியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காவேரிராஜாவை (42) போலீஸாா் கைது செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக சிறப்பாறையைச் சோ்ந்த விருமாண்டி, வீரணன், நல்லு, செல்வம் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.