தேனி
உத்தமபாளையத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
உத்தமபாளையத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
உத்தமபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , ஜாக்டோ வழக்குரைஞா் சங்கம் சாா்பில் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத் தலைவா் உமாபாரதி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.
அப்போது, நீதிமன்றத்தில் ‘இ-பைலிங்’ முறையை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்களின் சேமநல நீதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் திரளானோா் கலந்துகொண்டனா்.

