வளா்மதி
தேனி
பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சின்னமனூரில் சந்தை புதுத் தெருவைத் சோ்ந்த சிவசூரிய நாராயணன் தனது மனைவி வளா்மதி (46) உடன் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூரிலிருந்து தேனி சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினாா்.
அப்போது, சீலையம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பம்பட்டி பிரிவில் சென்றபோது பின்னால் வந்த டிப்பா் லாரி அவா்களது வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வளா்மதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், சிவசூரிய நாராயணன் பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

