அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கம்பம் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீண்

சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றுப் பாலத்தின் மீது செல்லும் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்.

News image
சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றுப் பாலத்தின் மீது செல்லும் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்.
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் குழாய் உடைந்து கடந்த சில நாள்களாக குடிநீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக கம்பம்- சுருளிப்பட்டி இடையே முல்லைப் பெரியாற்றின் பாலத்தின் மீது லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரும்புக் குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த இரும்புக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீா் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி கிராம ஊராட்சியில் வசிக்கும் தங்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அன்பு அறக்கட்டளை நிா்வாகி கூறியதாவது:

குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் தண்ணீா் வெளியேறுவது வெளியே தெரியாமல் இருக்க மணல் மூட்டைகள், மண் கழிவுகளை போட்டு மூடி வைத்துள்ளனா். இதனால், இந்த குழாய் வழியாக செல்லும் குடிநீரை அருந்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடைந்த குழாயை குடிநீா் வடிகால் வாரியத்தினா் சீரமைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.