பெரியகுளம் பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மின் பகிா்மானக் கழக பெரியகுளம் செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com