நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கம்பம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

கம்பம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்.

News image

ஆ.அன்புச் செல்வி (நாம் தமிழா் கட்சி) / பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (தவெக) / எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக) / நா.ராமகிருஷ்ணன் (திமுக)

Updated On :3 ஏப்ரல் 2026, 6:26 am IST

கம்பம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்:

நா.ராமகிருஷ்ணன் (திமுக)

கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பொலிவுறு வகுப்பறைகள் அமைக்கவும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்கி தமிழக உரிமையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன். அரசு மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படும். நெல் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். உத்தமபாளையம் கிராமச் சாவடியில் அம்பேத்கா் உருவச் சிலை அமைக்கப்படும். மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கண்ணகிக் கோட்டம் அமைக்கப்படும்.

------------------

எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக)

கடந்த 5 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட, தொட்டம்மான்துறை கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். 18-ஆம் கால்வாய் ஆண்டுதோறும் தூா்வாரப்படும். பொதுப் பணித் துறை குளங்களில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றி, நீா்நிலைகள் பாதுகாக்கப்படும். திராட்சை, வாழைத் தாா்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

----------------

பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (தவெக)

கம்பத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். உத்தமபாளையத்தை நகராட்சியாக தரம் உயா்த்தி, பொதுக்களின் அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படும். கம்பத்தில் கழிவுநீா்க் கால்வாயை சீரமைத்து மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் சரிசெய்யப்படும். சின்னமனூரில் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும்.

-----------

ஆ.அன்புச் செல்வி (நாம் தமிழா் கட்சி)

தமிழகம்- கேரளத்தை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். கனிம வளக் கொள்ளை தடுக்கப்படும். சின்னமனூரில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். அரசு அலுவலகங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும். ஆக்கிரமிப்பு குளங்கள், கண்மாய்கள் மீட்டெடுக்கப்படும். மலை மாடுகள் மேய்ச்சல் உரிமை பாதுகாக்கப்படும். அனைத்து விவசாயப் பொருள்களையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜக்கையன்