வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை

Updated On :4 ஏப்ரல் 2026, 11:57 pm IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

உத்தமபாளையம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகி வந்தனா். இந்த நிலையில், கம்பம், கூடலூா், உத்தமபாளையம், தேவாரம், சின்னமனூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த திடீா் மழையால் வெப்பம் தனித்து குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உத்தமபாளையம் செல்லும் சாலையில் சாலைப் பணியின் போது தோண்டப்பட்ட கழிவுநீா் கால்வாய் பள்ளத்தால் மழைநீா் செல்ல வழியின்றி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா், சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போடி: போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் வரை போடி பகுதியில் வெப்பம் நிலவிய நிலையில், 2 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமாப் ஒரு மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் இந்தப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.