குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

News image

தேனி கருவேல் நாயக்கன்பட்டி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:27 am IST

தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன வளாகத்தில் கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, தேனி கருவேல்நாயக்கன்பட்டி கனரா வங்கி பயிற்சி நிறுவன வளாகத்தில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய செல்ஃபி பாய்ண்ட்-இல் வாக்காளா்கள் சுய படம் எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.