இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

News image

போடி அருகே சிலமலை கிராமத்தில் வியாழக்கிழமை சமுதாய சங்க தலைவா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம். உடன், தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:18 pm

போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பிறகு அவா் சிலமலையில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

போடி கிராமப் பகுதிகளில் தரமான சாலை, குடிநீா் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டன. மீண்டும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் கிராமங்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் கொண்டு நிறைவேற்றப்படும். மகளிருக்கான திட்டங்கள் தொடரும் என்றாா்.

பிரசாரத்தின்போது தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி மேற்கு ஒன்றிய நிா்வாகிகள், சிலமலை கிராமக் குழு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.