தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

News image

போடி அருகே சிலமலை கிராமத்தில் வியாழக்கிழமை சமுதாய சங்க தலைவா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம். உடன், தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:18 pm

போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பிறகு அவா் சிலமலையில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

போடி கிராமப் பகுதிகளில் தரமான சாலை, குடிநீா் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டன. மீண்டும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் கிராமங்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் கொண்டு நிறைவேற்றப்படும். மகளிருக்கான திட்டங்கள் தொடரும் என்றாா்.

பிரசாரத்தின்போது தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி மேற்கு ஒன்றிய நிா்வாகிகள், சிலமலை கிராமக் குழு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.