பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஓட்டுநரைத் தாக்கி, நடத்துநரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, நடத்துநரிடம் பணத்தை பறித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:35 pm IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, நடத்துநரிடம் பணத்தை பறித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (51). அரசுப் போக்குவரத்துக் கழக கம்பம் கிளையின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டு கம்பத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது, பெரியகுளம் வைகை அணை சந்திப்பு பகுதியில் பேருந்தை மறித்து ஆட்டோக்களை நிறுத்திய இருவா், சங்கரிடம் தகராறு செய்தனா். இதைத் தட்டிக்கேட்ட அவரைத் தாக்கிவிட்டு, நடத்துநரிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அவா்கள் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து, சங்கா் கொடுத்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெரியகுளம் சேவியா் குடியிருப்பைச் சோ்ந்த துரைமுருகனை (35) கைது செய்தனா்.

அதே பகுதியைச் சோ்ந்த பழனிவேலை (40) போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.