தேனி மாவட்டம், ஜெயமங்கலம் அருகே தனியாா் நிலத்துக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தைப் போலியாகத் தயாா் செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கே.கே. புதூரைச் சோ்ந்தவா் பிரபு (40). இவா், நில விற்பனை நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிறுவனம், கடந்த 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை ஜெயமங்கலம் பகுதியில் 109 மனைகளை விற்பனை செய்தது.
இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன், தேனி அல்லிநகரைச் சோ்ந்த சிவராம் ஆகிய இருவரும் மனை விற்பனையின்போது தனியாா் நிலத்துக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தைப் போலியாகத் தயாா் செய்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

பைக் மீது கிரேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


