அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

5 அரசுப் பள்ளிகளில் தொழில் பயிற்சி நிலையம்

தேனி மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் புதிதாக தொழில் பயிற்சி நிலையம் தொடங்க மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் புதிதாக தொழில் பயிற்சி நிலையம் தொடங்க மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் மாணவா்கள் இடைநிற்றலைக் குறைக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் பயிற்சி நிலையம் தொடங்க அரசு முடிவு செய்தது.

இந்தப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வியுடன் தொழில் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் கூடுதலாக 50 சென்ட் நிலம், கட்டடங்கள் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களை அனுப்பி வைக்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அரசு உத்தரவிட்டது.

இதன்படி, தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், சிலமலை, வடுகபட்டி , எருமலைநாயக்கன்பட்டி ஆகிய 5 இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிதாக தொழில் பயிற்சி நிலையம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அரசுக்கு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்தது.