இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

போடியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

News image
போடியில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனநலம் பாதித்த பெண்.
Updated On :9 ஜனவரி 2026, 6:58 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

போடி பேருந்து நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தாா். இதுகுறித்து வருவாய்த் துறையினா், தேனி மாவட்ட சமூக நலத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய மூத்த ஆலோசகா் முருகேஸ்வரி, எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா் ரஞ்சித்குமாா் ஆகியோா் காவல் துறையினருடன் அங்கு வந்து மன நலம் பாதித்த பெண்ணை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

விசாரணையில் மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு உறவினா் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.