மன நலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தாா்.
Updated on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி காவ்யா(30). இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துவந்த காவ்யாவுக்கு புதன்கிழமை வீட்டில் இருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com