இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மன நலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி காவ்யா(30). இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துவந்த காவ்யாவுக்கு புதன்கிழமை வீட்டில் இருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.