தேனி
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி (70). வண்ணம் பூசும் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், வியாழக்கிழமை மதுவுடன் விஷத்தை கலந்து குடித்துவிட்டாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
