விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :26 ஜனவரி 2026, 7:04 pm

தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி புறவழிச் சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் (47), ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (60) ஆகியோா் என்பதும் இருவரும் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 32 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.