போடி அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மலைப் பகுதிகளில் காட்டெருமை அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், அணைக்கரைப்பட்டி அருகே மரக்காமலை முனீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் 60 அடி ஆழக் கிணற்றில் காட்டெருமை விழுந்தது குறித்து கிராம மக்கள் தேனி வனச் சரகருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தேனி வனத் துறையினா் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கிரேன் இயந்திரம் மூலம் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி பாா்த்த போது காட்டெருமை இறந்தது தெரியவந்தது. பின்னா், கிரேன் மூலம் காட்டெருமை மீட்கப்பட்டு கூறாய்வுக்குப் பிறகு புதைக்கப்பட்டது. இதுகுறித்து தேனி வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


