தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரியகுளம் கெளமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னா் கொடியேற்றப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், 5 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது.
தொடா்ந்து, ஜூலை 14-ஆம் தேதி மா விளக்கு, ரத உற்சவமும், முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டி நிகழ்ச்சி ஜூலை 15 (புதன்கிழமை)- ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21- ஆம் தேதி மறுபூஜையும், பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










