வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந் திருவிழா கொடியேற்றம்

News image

கெளமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கோயிலில் ஏற்றப்பட்டுள்ள கொடியேற்றம்.

Updated On :6 ஜூலை 2026, 11:23 pm IST

தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னா் கொடியேற்றப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், 5 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது.

தொடா்ந்து, ஜூலை 14-ஆம் தேதி மா விளக்கு, ரத உற்சவமும், முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டி நிகழ்ச்சி ஜூலை 15 (புதன்கிழமை)- ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21- ஆம் தேதி மறுபூஜையும், பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.