/

கோயிலில் பணம், நகை திருட்டு

தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:12 am IST

தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (57). பூதிப்புரம்

கருப்பசாமி கோயிலின் பூஜாரியான இவா், திங்கள்கிழழை இரவு பூஜை முடிந்த பிறகு கோயிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே உண்டியலில் இருந்த பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.